எத்தனை கோடி கொடுத்தாலும் ரஜினிக்கு வில்லனாக நடிக்க மாட்டேன் – விக்ரம்!

 எத்தனை கோடி கொடுத்தாலும் ரஜினிக்கு வில்லனாக நடிக்க மாட்டேன் – விக்ரம்!

ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் நடிக்கவிருக்கிறது.

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். அதற்காக விக்ரமிற்கு 50 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்க லைகா நிறுவனம் ரெடியாக இருந்ததாம். ஆனால், இதை விக்ரம் ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கான காரணமும் தங்கலான் திரைப்படம் தானாம். தங்கலான் படம் விக்ரம் கேரியரில் மிக முக்கியமானதாக இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால் தங்கலான் வெளியாகும் நேரம் தலைவர் 170 படமும் ரிலீஸானால் அது சிக்கலாகிவிடும் என்று விக்ரம் யோசித்து வருகிறாராம். இதன் காரணமாக தான் சம்பளம் அதிகம் என்றாலும் துணிந்து நோ சொல்லிவிட்டாராம் விக்ரம்.

 

Spread the love

Related post

You cannot copy content of this page