யுவன் ஷங்கர் ராஜாவோடு இணையும் பா.ரஞ்சித்

 யுவன் ஷங்கர் ராஜாவோடு இணையும் பா.ரஞ்சித்

பா ரஞ்சித் தற்போது விக்ரமை வைத்து தங்கலான் படத்தினை இயக்கி வருகிறார். விக்ரமின் வித்தியாசமான நடிப்பில் இப்படம் உருவாகி வருகிறது.

மதுரை, கே ஜி எஃப் என பல்வேறு இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜனவரி மாதம் துவங்கப்படவிருக்கிறது.

இந்நிலையில் மார்கழியில் மக்களிசை – 2022 என்ற நிகழ்ச்சியை பா ரஞ்சித் நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய யுவன் சங்கர் ராஜா, விரைவில் பா ரஞ்சித்துடன் இணைந்து பணியாற்ற உள்ளேன் என்று கூறியுள்ளார். இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Related post