சுஷாந்த் சிங் கொல்லப்பட்டார்!? வெளியான அதிர்ச்சி தகவல்!

 சுஷாந்த் சிங் கொல்லப்பட்டார்!? வெளியான அதிர்ச்சி தகவல்!

தோனி திரைப்படம் மூலம் அனைவருக்கும் தெரியும் முகமானார் நடிகர் சுஷாந்த் சிங். சில வருடங்களுக்கு முன் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் என தகவல் வெளியானது.

சுஷாந்தின் உடலை, கூப்பர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த குழுவில் இடம்பெற்ற ரூப்குமார் ஷா என்பவர் தற்போது கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த மாதம் ஓய்வு பெற்ற இவர், ‘சுஷாந்த் சிங்கின் கழுத்துப் பகுதியில் 3 காயங்கள் தென்பட்டன. அதனால், இது தற்கொலை அல்ல என்று உணர்ந்தேன். அவர் உடலில் மேலும் சில காயங்கள் எலும்பு முறிவு போல தெரிந்தன.

இதுபற்றி மேலதிகாரியிடம் தெரிவித்தேன். அவர், அதுபற்றி பிறகு பேசலாம் என்றார். பிரேத பரிசோதனையை விரைவாக முடித்து, உடலை போலீஸிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். அவர்கள் உத்தரவுபடி செய்தோம்’ என்று கூறியுள்ளார். இது இந்தி சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Related post