திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போட்டியாளர்; பரபரப்பான இறுதிக்கட்டத்தில் பிக் பாஸ் வீடு;

 திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போட்டியாளர்; பரபரப்பான இறுதிக்கட்டத்தில் பிக் பாஸ் வீடு;

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் திடீரென்று அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் 10 போட்டியாளர்களுள் ஒருவர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அத்துடன் வார இறுதி நாட்கள் ஆன சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று கமலஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதால், இந்த வாரத்தில் மட்டும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால் கமலஹாசன் திடீரென்று டெல்லிக்கு ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்து கொள்ள உள்ளார்.

ஆகையால் இந்த வாரத்திற்கான வீகென்ட் படப்பிடிப்பு முன்கூட்டியே நடத்தப்பட்டது. இப்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஏடிகே திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இவர் கடந்த சில நாட்களாகவே பிக் பாஸ் வீட்டில் சோர்வுடன் காணப்பட்டார்.

அடிக்கடி இவர் தன்னுடைய மகனை நினைத்து அழுது புலம்பி கொண்டிருந்தால் மன அழுத்தம் ஏற்பட்டது. மேலும் அவருக்கு நரம்பு தளர்ச்சி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அத்துடன் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இடம்பெறாத ஏடிகே விரைவில் குணமடைந்து மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவாரா அல்லது வாக் அவுட் ஆகிவிடுவாரா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Related post