சாகுந்தலம் விமர்சனம்

 சாகுந்தலம் விமர்சனம்

குணசேகரன் இயக்கத்தில் சமந்தா, தேவ் மோகன், நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் சாகுந்தலம்.

எதை பேசுகிறது இப்படம்?

முனிவர் விடும் சாபத்தினால் தன்னை மறந்த காதலனை காதலி கரம் பிடித்தாரா. காதலின் உணர்வு எவ்வளவு ஆழமானது என்பதை இப்படம் பேசுகிறது.

கதைப்படி,
விஸ்வாமித்திர முனிவருக்கும் மேனகைக்கும் பிறந்த குழந்தையான சாகுந்தலா (சமந்தா) ஒரு மடத்தில் கண்வ மகரிஷியின் சொந்த மகளாக வளர்ந்து வருகிறாள்.

அப்போது ஒருநாள் அரசன் துஷ்யந்தன் (தேவ் மோகன்) ஊருக்குள் நுழைந்த விலங்குகளை துரத்திக் கொண்டே ஆசிரமத்திற்குள் வருகிறான் அப்போது சமந்தாவின் அழகில் மயங்கிய தேவ் மோகன் அவள் மேல் காதல் வயப்படுகிறான்.

ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து வருகின்றனர். அப்போது ஒருநாள் தேவ்மோகன் தான் அரண்மனைக்கு செல்ல வேண்டும் என்றும் விரைவில் திரும்பி வந்து உன்னையும் அழைத்து செல்வதாக சமந்தாவிடம் உறுதியளித்து விட்டு புறப்படுகிறான். இதற்கிடையே சமந்தா கருவுறுகிறாள்.

இதனால் தேவ் மோகனை தேடி அரண்மனைக்கு சென்ற சமந்தாவை நீ யார் என்றே எனக்கு தெரியாது என்று கூறி தேவ் மோகன் அவமானப்படுத்திகிறான்.

இறுதியில் சமந்தா தன் காதலனை கரம் பிடித்தாரா..? தேவ் மோகன், சமந்தாவை தெரியாது என்று கூறுவதன் காரணம் என்ன..? என்பதே படத்தின் மீதிக்கதை.

மிகவும் சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் சமந்தா. ஆனால், மற்ற படங்களை விட இந்த படத்தில் அவர் நடிப்பை வெளிக்காட்டவில்லை. காரணம் அவரின் உடல் நலக் குறைவாக கூட இருக்கலாம். ஆனால், இப்படத்தை தாங்கி பிடிக்கும் அளவிற்கு அவருக்கு தெம்பு இல்லை.

தேவ் மோகன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பரது வேடத்தில் நடித்திருக்கும் அல்லு அர்ஹா அனைவரையும் கவர்கிறார்.

புராணக் கதையை தற்போது உள்ள தொழில் நுட்பத்திற்கு ஏற்றவாறு படமாக எடுக்க முயற்சித்துள்ளார் இயக்குனர் குணசேகர். என்னதான் படத்தில் தேவையற்ற காட்சிகள் எதுவும் இல்லை என்றாலும். காதல் படம் என்பதாலோ என்னவோ பல இடங்களில் நம்மை “உச்” கொட்ட வைக்கிறது.

பல முக்கிய கதாபாத்திரங்கள் மனதில் நிற்காமல் போனது ஏமாற்றம். திரைக்கதையை இன்னும் பலமாக அமைத்திருக்கலாம் என்ற எண்ணமும் எழுகிறது.

கிளைமாக்ஸில் வரும் சண்டைக்காட்சிகள் மிகவும் செயற்கையாக இருப்பது வருத்தமளிக்கிறது.

மணி சர்மாவின் இசையும் பின்னணி இசையும் பெரிதாக கவரவில்லை . சேகர் வி ஜோசப் ஒளிப்பதிவு பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளிக்கிறது.

சாகுந்தலம் – காதல் காவியம்.

Related post