சந்திரமுகி 2 ரிலீஸ் தேதி மாற்றம்; கொந்தளித்த தயாரிப்பாளர் தனஞ்செயன்!
பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா, வடிவேலு உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படமான சந்திரமுகி வரும் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், படத்தின் சிஜி பணிகள் முடிவடையாததால், படம் செப்டம்பர் 28 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 28 அன்று ஏற்கனவே 4 படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சந்திரமுகி 2 வெளியிட்டால் தங்களது திரையரங்குகளின் எண்ணிக்கை பாதிக்கப்படும் என 4 படங்களின் தயாரிப்பாளர்களும் பதட்டத்தில் உள்ளனர்.
அதில், ரத்தம் பட தயாரிப்பாளரான தனஞ்செயன் X தளத்தில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில், “ தமிழ் சினிமாவின் மற்றொரு வலிமிகுந்த விஷயம், பெரிய படங்களின் நிறுவனங்கள் அவர்கள் இஷ்டத்துக்கு ரிலீஸ் தேதியை மாற்றுவது. அந்த தேதியில் ரிலீஸ் ஆகவுள்ள படங்களை பற்றி சிறிது கூட யோசிப்பதில்லை. செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் ஐந்துக்கும் மேற்பட்ட படங்களை ரசிகர்கள் எப்படி பார்க்க முடியும். பெரிய படங்களின் ரிலீஸ் தேதிகளை அறிவிப்பதன் ஒழுக்கம் எங்கே” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.