எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கஸ்டடி; வெங்கட் பிரபுவின் மாஸ்டர் பிளான்

 எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கஸ்டடி; வெங்கட் பிரபுவின் மாஸ்டர் பிளான்

நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகி வெளிவர தயாராக இருக்கும் படம் தான் “கஸ்டடி”. மங்காத்தா, மாநாடு போன்ற மாஸ் படங்களை இயக்கிய வெங்கட் பிரபு இப்படத்தை இயக்கியுள்ளார்.

இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். த்ரில்லர் கதைக்களத்துடன் உருவான இப்படம் இந்த ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி வெளியாகிறது.

“காயப்பட்ட ஒருவனின் மனது, அவனை எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லும். அது இப்போது என்னை கொண்டு வந்து விட்ட களம், ஒரு போர்க்களம்.” என்ற வசனத்துடன் ட்ரைலர் காட்சி தொடங்குகிறது. அதில் நாக சைதன்யா பேசிய இவ்வசனம், ஏதோ ஒரு பழி தீர்க்கும் அல்லது, பகை தீர்க்கும் கதையாக இப்படம் அமைந்திருக்கும் என்ற ஒரு எண்ணத்தை கொடுக்கிறது.

மேலும், தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் தெலுங்கு மொழியில் 16 மில்லியன் பார்வையளர்களையும், தமிழ் மொழியில் 6 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்து பாசிட்டிவ் விமர்சனத்தையே பெற்றுள்ளது.

ஏற்கனவே “கஸ்டடி” படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில். தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. காரணம், படத்தில் மொத்தம் 7 சண்டை காட்சிகளாம். அந்த 7 சண்டை காட்சிகளும் மிகவும் ரியாலிட்டியாகவும், புதுமையாகவும் அதகளமாகவும் வந்துள்ளதாம்.

வழக்கமான வெங்கட் பிரபுவின் படமாக “கஸ்டடி” திரைப்படம் இருக்காது என்றும், வெங்கட் பிரபுவின் அடுத்த படமும் நேரடி தெலுங்கு படம் என்றும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளது. அதற்கு காரணம், தமிழ் மொழியில் அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும், தெலுங்கு ஆடியன்ஸ் நல்ல உருச்சகத்தை தருகிறார்கள் என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.

Related post