என் மகனுக்கு சாதி வேண்டாம் – கயல் ஆனந்தி!

 என் மகனுக்கு சாதி வேண்டாம் – கயல் ஆனந்தி!

கயல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் ஆனந்தி. அப்படம் கொடுத்த வெற்றியால் தனது பெயரை கயல் ஆனந்தி என்று பெயர் மாற்றிக் கொண்டார். தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கென ஒரு முத்திரையைப் பெற்றுக் கொண்டார் கயல் ஆனந்தி.

இந்நிலையில், சில வருடத்திற்கு முன் உதவி இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆண்குழந்தை ஒன்று உள்ளது.

தற்போது, கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியிருக்கும் இராவணக் கோட்டம் திரைப்படம் வரும் 12 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இதனால், படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் மும்முரமாக இருந்து வருகிறார் கயல் ஆனந்தி. அப்போது, தனது மகனுக்கு சாதியில்லா சான்றிதழ் பெற்றிருப்பதாக கயல் ஆனந்தி கூறியிருக்கிறார்.

இதனால் பலரும் கயல் ஆனந்தியை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். எனது மகனுக்கு சாதியில்லா சான்றிதழ் வாங்கியதற்கு, தான் படித்த புத்தகங்களும், உரையாடிய சில நண்பர்களும் தான் காரணம் என்று கூறியுள்ளார்.

 

Related post