படக்குழுவினர்களுக்கு பிரியாணி விருந்து வைத்த சூர்யா!

 படக்குழுவினர்களுக்கு பிரியாணி விருந்து வைத்த சூர்யா!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாகி வரும் படம் தான் கங்குவா.. படத்தின் படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அதிகப்படியான பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தினை, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

கொடைக்கானல் பகுதியில் இரவு பகலாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. பனி, மழை என பொருட்படுத்தாது படக்குழுவினர் தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் கொடைக்கானல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், சூர்யா படக்குழுவினர் அனைவருக்கும் பிரியாணி விருந்து படைத்திருக்கிறார்.

அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கப்படவிருக்கிறது..

 

Related post