சத்தம் இன்றி முத்தம் தா விமர்சனம்

 சத்தம் இன்றி முத்தம் தா விமர்சனம்

இயக்கம்: ராஜ் தேவ்

நடிகர்கள்: ஸ்ரீகாந்த், பிரியங்கா திம்மேஷ், ஹரிஷ் பேராடி, வியான், நிஹாரிகா

இசை: ஜுபின்

ஒளிப்பதிவு: யுவராஜ்

தயாரிப்பு நிறுவனம் : செலிபிரைட் புரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர் : கார்த்திகேயன்.S

கதைப்படி,

கதை தொடங்கியதும், நாயகி ப்ரியங்காவை ஒருவர் கார் ஏற்றி கொல்ல முயற்சிக்கிறார். உயிருக்கு போராடிய ப்ரியங்காவை அவரது கணவர் ஸ்ரீகாந்த், மருத்துவமனையில் சேர்க்கிறார்.

ஒருவழியாக காப்பாற்றப்படுகிறார் ப்ரியங்கா. ஆனால், தனது பழைய நினைவுகள் அனைத்தையும் மறந்து விடுகிறார். ஸ்ரீகாந்த் தனது கணவர் என்பதை கூட மறந்து விடுகிறார்.

இந்த சூழலில், அவ்வப்போது ஒரு சிலரை பணத்திற்காக தொடர்ந்து கொலை செய்து வருகிறார் ஸ்ரீகாந்த். அப்படியாக, தன்னை கொலை செய்ய வரும் இருவரை ப்ரியங்காவின் கண்முன்னே கத்தியால் குத்தி கொன்று விடுகிறார்.

இதனால், அதிர்ச்சியடையும் ப்ரியங்கா, ஸ்ரீகாந்தையும் வெறுக்கிறார். இது ஒருபுறம் இருக்க, கொலை செய்து வரும் ஸ்ரீகாந்தை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இருக்கிறார் போலீஸாக வரும் ஹரீஷ் பெராடி.

எதற்காக ஸ்ரீகாந்த் கொலை செய்கிறார்.? போலீஸ் பிடியில் சிக்கினாரா ஸ்ரீகாந்த்.?? ப்ரியங்கா யார்.?? என்பதற்கான மொத்த விடையையும் இரண்டாம் பாதியில் வைத்திருக்கிறார் இயக்குனர் ராஜ் தேவ்.

நாயகனாக ஸ்ரீகாந்த், இதுவரை நடித்திராத ஒரு கேரக்டரில் நடித்து அசத்தியிருக்கிறார். அதிலும் ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கிறார்.

நாயகி ப்ரியங்கா, பார்ப்பதற்கு அழகாகவும் காட்சிகளில் அளவாகவும் நடித்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.

ஹரீஷ் பெராடியும் போலீஸாக வந்து மிரள வைத்திருக்கிறார். தனக்கே உரித்தான உடல் மொழியில் அனைவரையும் மிரட்டியிருக்கிறார்.

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் பெரும் பலமாக வந்து நிற்கிறது. ஆங்காங்கே திரைக்கதை சற்று தொய்வடைவது படத்திற்கு சற்று சறுக்கலாக நிற்கிறது.

மற்றபடி, சத்தம் இன்றி முத்தம் தா நம்மை சிலிர்க்க வைக்கும். ட்விஸ்ட் காட்சிகள் படத்திற்கு கூடுதல் பூஸ்டாக இருக்கிறது.

படத்தின் ஆரம்பத்திலேயே நாயகி பிரியங்கா திம்மேஷை கொலை செய்ய ஒருவர் விரட்டுகிறார். வீட்டிலிருந்து தப்பித்து வெளியே ஓடிச் செல்லும் பிரியங்காவை கார் ஒன்று அடித்து விடுகிறது. இதனால் தூக்கி வீசப்படும் பிரியங்கா, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

பழைய நினைவுகள் அனைத்தையும் இழந்து விடுகிறார் பிரியங்கா. அதன்பிறகு, நான்தான் உன் கணவன் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார் ஸ்ரீகாந்த்.

பின் இருவரும் வீட்டிற்கு செல்கின்றனர். அங்கு சில காலம் ஓய்வெடுக்கிறார் பிரியங்கா. இப்படியாக செல்லும் போது, அவ்வப்போது ஸ்ரீகாந்த் சிலரை கொடூரமாக கொன்று வருகிறார். பிரியங்காவின் கண்முன்னே இருவரை கொல்கிறார்.

வாழ்க்கை வெறுத்துப் போனது போல் இருக்கும் ப்ரியங்காவிற்கு அடுத்த அதிர்ச்சி காத்திருக்கிறது.

அடுத்து என்ன நடந்தது.?? ஸ்ரீகாந்த் யார்.??? என்பதே படத்தின் மீதிக் கதை.

இதுவரை ஏற்றிறாத கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த். அடுத்தடுத்து கொலைகளை செய்து யார் இவர் என்ற கேள்வியை அடுக்கடுக்காக வைத்துக் கொண்டு செல்வது சுவாரஸ்யம்.

ப்ளாஷ் பேக் காட்சிகளில் கண்களில் ஈரம் வர வைக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கிறார்.

நாயகி பிரியங்கா தான் படத்தின் மையக்கருவாக வந்து நிற்கிறார். காதல், எமோஷன், செண்டிமெண்ட் என அனைத்து ஏரியாக்களிலும் அழகு தேவதையாக வந்து காட்சிகளை அழகூற கொடுத்திருக்கிறார்.

ரகு கதாபாத்திரத்தில் வந்த வியான், தனக்குக் கொடுக்கப்பட்டதை அளவோடு செய்திருக்கிறார்.

எதற்காக தன் மனைவியை விட்டு அடுத்த ஒரு பெண்ணை தேடினார் என்பதற்கான பதில், ஒரு சுவாரஸ்யம் தான்.

நிஹாரிகாவின் நடிப்பும் அழகு தான்.

காட்சிகள் ஆங்காங்கே தொய்வடைவதும், லாஜிக் ஓட்டைகள் ஆங்காங்கே எட்டிப் பார்த்தது மட்டுமே படத்திற்கு சற்று பலவீனம்.

கதை, திரைக்கதை, பின்னணி இசை, பாடல் என படத்தில் பல பாசிடிவ் விஷயங்களை கொட்டி வைத்திருக்கிறார் இயக்குனர்.

பல ட்விஸ்ட் காட்சிகள் படத்தில் இருப்பதால், கதையின் சுவாரஸ்யத்தைக் கருதி சில பல காட்சிகளை விவரிக்க முடியவில்லை.

விடுமுறையை கொண்டாட சரியான படைப்பாக வந்திருக்கும் “சத்தமின்றி முத்தம் தா” படத்தை நிச்சயமாக ஒருமுறை பார்க்கலாம்.

சத்தமின்றி முத்தம் தா – சைலண்ட் ஹிட்.. – 2.75/5

Related post