10 மணிக்கு மேல் சென்ற ஏ ஆர் ரகுமானை கச்சேரி.. மேடையேறி நிறுத்திய போலீஸ்!

 10 மணிக்கு மேல் சென்ற ஏ ஆர் ரகுமானை கச்சேரி.. மேடையேறி நிறுத்திய போலீஸ்!

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவ்வப்போது தனது இசைக் கச்சேரியை நடத்தி வருபவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான்.

இந்த நிகழ்ச்சியைக் காண பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதுடன், மாநிலம் விட்டு மாநிலம் சென்றும் ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சியை கண்டு களித்து வருகின்றனர்.

அந்த அளவிற்கு ஏ ஆர் ரகுமானின் இசைக்கு மிகப்பெரும் ரசிகர்கள் பட்டாளங்களே உள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் புனேவின் ஏ ஆ ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியானது இரவு 10 மணியை தாண்டி சென்று கொண்டிருந்த நிலையில், புனே காவல்துறையினர் இசை நிகழ்ச்சி நடக்கும் போது மேடையேறி சென்று ஏ ஆர் ரகுமான் பாடுவதை நிறுத்துமாறு கூறினார்.

இதனால், ஒட்டுமொத்த ரசிகர்களும் கோபமடைந்தனர். நிறுத்துச் சொல்வதற்கு இதுதான் முறையா என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

போலீஸார் கூறியதை அடுத்து ஏ ஆ ரகுமான் இசை நிகழ்ச்சியை நிறுத்தி விட்டு அங்கிருந்து உடனே கிளம்பினார்.

 

Related post