குத்து ரம்யா காலமானார்; காட்டுத்தீயாய் பரவிய வதந்தி!

 குத்து ரம்யா காலமானார்; காட்டுத்தீயாய் பரவிய வதந்தி!

தமிழில் குத்து, பொல்லாதவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து தெலுங்கில் பல படங்களில் நடித்து கொடி நட்டியவர் நடிகை ரம்யா ஸ்பந்தனா.

இவர் நேற்று மாரடைப்பால் காலமானதாக காட்டுத்தீயாய் செய்தி பரவியது.

அதன்பிறகு தான் இந்த செய்தி வெறும் வதந்தி என அனைவருக்கும் தெரிய வந்தது.

நேற்று, சில தொலைக்காட்சிகளும், இணையதளங்களும் நடிகை காலமானதாக செய்தியை வெளியிடத் துவங்கியிருந்தன. இதனால் திரையுலகினரிடையேயும், ரசிகர்களிடையேயும் அதிர்ச்சியும், குழப்பமுமான நிலை உருவானது.

ஆனால் தற்போதுநடிகை திவ்யா ஸ்பந்தனா நலமாக இருப்பதாக விசாரித்த தகவல்கள் உறுதிப்படுத்திய நிலையில், இணையதளங்களில் வெளியான தவறான செய்திகளைப் பலரும் நீக்கி வருகிறார்கள்.

 

Related post