இந்த படம் இல்ல.. அடுத்த படம் இளையராஜாவோடு தான் – அல்போன்ஸ் புத்ரன்!

 இந்த படம் இல்ல.. அடுத்த படம் இளையராஜாவோடு தான் – அல்போன்ஸ் புத்ரன்!

நேரம், பிரேமம் மற்றும் கோல்டு உள்ளிட்ட படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்.

பிரேமம் வெளியாகி பல ஆண்டுகள் கழித்து கோல்டு வெளியானது. ஆனால், மிகப்பெரும் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில், இவர் அடுத்ததாக தமிழில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் இந்த படத்தை தயாரிக்கவிருக்கிறார்.,

இது ஒரு காதல் படமாக உருவாக இருக்கிறது. படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில் அல்போன்ஸ் புத்ரன், “நான் இப்போது இயக்கவுள்ள படத்துக்குப் பிறகு அடுத்த படத்தில் இசைஞானி இளையராஜாவோடு பணியாற்றுவதை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Related post