மாரி செல்வராஜின் “வாழை”…. முதலில் தியேட்டர் அப்புறம் தான் ஓடிடி!
மாமன்னன் திரைப்படத்திற்குப் பிறகு, இயக்குனர் மாரி செல்வராஜ் சத்தமே இல்லாமல் வாழை என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.
முதலில் நேரடியாக ஓடிடி’யில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது முதலில் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அதன் பிறகே டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இப்படமானது, முழுக்க முழுக்க சிறுவர்களை மையப்படுத்தி கதை சுழல இருக்கிறது.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவிருக்கிறார்.