ஆழ்ந்த சோகத்தில் ராஷ்மிகா; சினிமாவை விட்டு விலகவேண்டுமா?

 ஆழ்ந்த சோகத்தில் ராஷ்மிகா; சினிமாவை விட்டு விலகவேண்டுமா?

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இன்றுடன் 250 கோடிக்கு மேல் வசூலித்ததாகவும் படக்குழு தெரிவித்தது.

தற்போது, அப்படத்தில் ஹீரோயினாக நடித்த ராஷ்மிகா மிகுந்த வருத்தத்திலுள்ளாராம். கன்னட மொழி படங்களில் மூலம் அறிமுகமான ராஷ்மிகா தமிழில் கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய் தேவர்கொண்டவுடன் இவர் ஜோடி போட்ட “கீத கோவிந்தம்” திரைப்படம் அவர்கள் இருவருக்குமே பெரும் திருப்புமுனையை அமைந்தது.

மேலும், அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது. விஜய்யுடன் அவர் நீண்ட காலமாக நடிக்க வேண்டும் என்ற ஆசை வாரிசு படத்தின் மூலம் நிறைவேறி உள்ளது.

இந்த சூழ்நிலையில் கடந்த சில மாதங்களாக ராஷ்மிகாவுக்கு எதிராக இணையத்தில் தொடர்ந்து அவ்வப்போது ஏதாவது செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இதனால் அவருக்கு சொந்த மொழியிலேயே ஏகப்பட்ட பிரச்சனைகள் வரத் தொடங்கியது. அடுத்தடுத்து ராஷ்மிகாவை டார்கெட் செய்யும் விதமாக ட்ரோல்கள் வெளியானது.

இது குறித்து ரஷ்மிகா சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அதாவது உடற்பயிற்சி செய்தால் பையன் மாதிரி தோற்றமளிப்பதாக கூறுகிறார்கள், இல்லையென்றால் குண்டாக இருக்கிறேன் என்று சொல்கிறார்கள். பேசாமல் இருந்தால் திமிரு என்று சொல்கிறார்கள். இப்படி எது செய்தாலும் குத்தம் கண்டுபிடிக்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாக சினிமாவை விட்ட விலக வேண்டும் என்று நினைக்கிறார்களா என்பது தெரியவில்லை. மேலும் என்னிடம் உங்களுக்கு என்ன தான் பிரச்சனை. உங்களுடைய வார்த்தைகளால் நான் மிகவும் மன ரீதியாக புண்பட்டு உள்ளதாக மிகுந்த வேதனையுடன் ராஷ்மிகா கூறியுள்ளார்.

இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் ரஷ்மிகாவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதைக் கெடுப்பதற்காக சிலர் சூழ்ச்சி செய்து பொய்யான தகவல்களை பரப்புவதாக கூறப்படுகிறது. இதுபோல கமெண்ட்களால் ராஷ்மிகா மிகுந்த மன கஷ்டத்தில் தன் மனதில் உள்ள விஷயங்களை ரசிகர்களிடம் வெளிப்படுத்தி உள்ளார்.

Related post