பத்திரிகையாளர்களை சந்திக்காமல் வெளிவரும் படங்கள்! நம்பிக்கை இல்லையா.?

 பத்திரிகையாளர்களை சந்திக்காமல் வெளிவரும் படங்கள்! நம்பிக்கை இல்லையா.?

தமிழ் சினிமாவில் வருட வருடம் பொங்கல், தீபாவளி பண்டிகையைப் போல ஏப்ரல் 14 அன்றும் ஒரு முக்கிய தினமாக கருதப்படும்.

மிகப்பெரும் உயர் நட்சத்திரங்கள் அல்லது அநேக படங்கள் அந்த தேதியில் வெளியாகும். தமிழ் வருடமாக கொண்டாடப்படும் அந்த தினமான வரும் வெள்ளி அன்று நிறைய படங்கள் வெளியாக இருக்கிறது.

அதில், பெரிய நட்சத்திரங்கள் படம் எதுவும் வெளியாகவில்லை.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் ருத்ரன்,
அருள்நிதி நடிப்பில் திருவின் குரல்,
யோகிபாபு நடிப்பில் யானை முகத்தோன்,
மகேந்திரன் நடிப்பில் ரிப்பப்பரி,
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சொப்பண சுந்தரி,
விஜய் ஆண்டனி நடிப்பில் தமிழரசன்,
சமந்தா நடிப்பில் சாகுந்தலம்

உள்ளிட்ட படங்கள் ரிலீஸாக இருக்கின்றன.

பத்திரிகையாளர்களை சந்தித்து, அதில் இருந்து ப்ரோமோஷன் பெற்றுவரும் படங்கள், தனக்கான வெற்றிப் பாதையை உருவாக்கிக் கொண்டு பயணிக்கும்.

அந்த வரிசையில் வழக்கம்போல் தமிழரசன் இந்த ரேஸில் இருந்து விலகி விட்ட சூழலில், ருத்ரன், திருவின் குரல், யானை முகத்தோன் மற்றும் சாகுந்தலம் உள்ளிட்ட படங்கள் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் நேரடியாக வெளியாகின்றன.

தங்கள் படங்களின் மீது இவர்களே நம்பிக்கை இழந்து விட்டனர் என்பதை தான் இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

 

Related post