சென்னையில் பிரமாண்ட மல்டிப்ளக்ஸ் தியேட்டர் துவங்கும் சிவகார்த்திகேயன்!

 சென்னையில் பிரமாண்ட மல்டிப்ளக்ஸ் தியேட்டர் துவங்கும் சிவகார்த்திகேயன்!

சென்னையில் மிகவும் பிரமாண்டமான முறையில் மல்டிப்ளக்ஸ் திரையரங்கு ஒன்றினை கட்டவிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

ஏசியன் சினிமாஸோடு இணைந்து சிவகார்த்திகேயன் இந்த திரையரங்கை கட்டவிருக்கிறார்.

எந்த இடத்தில் இது அமையவிருக்கிறது என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும்.

ஐதராபாத்தில் உள்ள அமீர்பேட்டையில் நடிகர் அல்லு அர்ஜூனோடு இணைந்து ஏசியன் சினிமாஸ் பிரமாண்ட திரையரங்கை கட்டியிருக்கிறது. ஓரிரு நாட்களுக்கு முன்பு தான் இந்த மல்டிபிளக்ஸ் திரையரங்கை திறக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல் தான், சென்னையில் சிவகார்த்திகேயனோடு இணைந்து இந்த மல்டிப்ளக்ஸ் திரையரங்கை கட்டவிருக்கிறது ஏசியன் சினிமாஸ்.

 

Related post