100 பேருக்கு தலா 1 லட்சம்; அன்பு காட்டிய விஜய் தேவரகொண்டா!
சமீபத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான குஷி திரைப்படம் அனைவராலும் பெரிதாக வரவேற்கப்பட்டது., பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், படம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் விஜய் தேவரகொண்டா தனது ஊதியத்தில் இருந்து சுமார் 1 கோடியை எடுத்து 100 குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் வீதம் கொடுக்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.,
இந்த அறிவிப்பு பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான விண்ணப்பம் எனது சமூக வலைதள பக்கத்தில் இணைக்கப்படும் என்றும் அதிலிருந்து தேர்வு செய்து அந்த குடும்பங்களுக்கு பணம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.