1000 கோடி; ”புஷ்பா 2”வை விலைக்கு வாங்க காத்திருக்கும் நிறுவனம்!

 1000 கோடி; ”புஷ்பா 2”வை விலைக்கு வாங்க காத்திருக்கும் நிறுவனம்!

சுகுமாரன் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரும் ஹிட் அடித்த படம் தான் புஷ்பா.

அனைவராலும் பெரிதளவில் கொண்டாடப்பட்ட இப்படம், வசூலையும் வாரிக் குவித்தது., இந்நிலையில், இப்படத்தினைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் எடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது படக்குழு.

சுமார் 50 சதவீத படப்பிடிப்பு பணிகள் முடிந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.. சுமார் 400 கோடி பட்ஜெட்டில் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புஷ்பா 2’ படத்தின் ஒட்டுமொத்த உரிமையை 1000 கோடிக்கு வாங்க கோல்ட் மைன் என்ற இந்தி மொழி தயாரிப்பு நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது இந்திய சினிமாவில் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.

 

Related post