தமிழில் பேச மறுத்த நடிகை கீர்த்தி சுரேஷ்
ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, நடிகையர் திலகம், சர்கார், அண்ணாத்த போன்ற படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தெலுங்கு படமான “தசரா” பெரிய அளவில் ஹிட் அடித்தது. மேலும், இவரின் அடுத்த படங்களோ தொடர்ச்சியாக தெலுங்கு மொழி படங்களாகவே இருக்கிறது. அதற்கிடையில் சில தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
இந்நிலையில், இன்று திருப்பதி கோயிலுக்கு தனது குடும்பத்துடன் தரிசனம் கீர்த்தி சுரேஷ். செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்தார். அந்த பெட்டியில், தொடர்ச்சியாக தெலுங்கில் மட்டுமே பேசிவந்த கீர்த்தி சுரேஷை, பத்திரிகை நிருபர் ஒருவர் தமிழில் பேசுமாறு கேட்டதற்கு.
தமிழா? நான் திருப்பதியில் இருக்கிறேன், என்று தட்டிக்கழித்து விட்டார். எனவே, தமிழில் பேச கீர்த்தி சுரேஷ் மறுத்ததால், நெட்டிசன்களிடம் சர்ச்சையில் சிக்கியுள்ளர் கீர்த்தி சுரேஷ்.