காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த டோவினோ தாமஸ்!

 காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த டோவினோ தாமஸ்!

மாரி 2 படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தோன்றியவர் மலையாள நடிகர் டோவினோ தாமஸ்.

இவர், மலையாளத்தில் பல வெற்றி படங்களை கொடுத்தவர். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 2018 என்ற திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், நல்லதொரு வசூலையும் வாரிக்குவித்தது.

இவர் தற்போது கொச்சி உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், தன்னைக் குறித்து சமூக வலைதளங்களில் சிலர் அவதூறு பரப்பி வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

யார் யார் தன்னை அவதூறு பரப்புகிறார்கள் என்பதையும் அதிகாரிகளிடம் கூறியிருக்கிறாராம் டோவினோ தாமஸ்.

போலீஸார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

 

Related post