தொடரும் “பவுன்சர்கள்” அடாவடி… “சந்திரமுகி 2” விழாவில் நடந்த அடிதடி சம்பவம்!

 தொடரும் “பவுன்சர்கள்” அடாவடி… “சந்திரமுகி 2” விழாவில் நடந்த அடிதடி சம்பவம்!

சினிமா விழாக்களில் நடிகர், நடிகைகளின் பாதுகாப்பிற்காக பவுன்சர்களை பாதுகாப்பிற்கு அழைப்பது வழக்கம்.

ஆனால், சமீபகாலமாக அப்படி வரும் பவுன்சர்கள் அத்துமீறி அடிதடியில் இறங்கி வருகின்றனர்.

நேற்று முன் தினம் சென்னையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அதே சம்பவம் அரங்கேறியுள்ளது.. ஆனால், இம்முறை கல்லூரி மாணவரை சரமாரியாக தாக்கியிருக்கின்றனர் பவுன்சர்கள்.

விழா நடைபெற்ற அரங்கிற்கு வெளியே, அதே கல்லூரி மாணவர் ஒருவரை ஐந்து பவுன்சர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவிலும் இதே சம்பவம் நடந்தேறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சமீபகாலமாக கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் சினிமா விழாக்கள் நடைபெறுவதை எதிர்த்து கல்வியாளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எதையும் பொருட்படுத்தாமல் பல நிறுவனங்கள் தங்களது சினிமா நிகழ்ச்சியை கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் தொடர்ந்து நடத்தி வருகிறது.

அப்படி நடக்கும் நிகழ்ச்சிகளில் இப்படியான அடாவடிகளை பவுன்சர்கள் செய்து வருவதை கண்டித்து பலரும் கண்டனக் குரலை பதிவு செய்து வருகின்றனர்.

இச்சம்பவத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டு தமிழக அரசு உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

சந்திரமுகி 2 விழாவில் நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் தனது வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related post