திரையரங்கு உரிமையாளர்களுக்கு கோரிக்கை வைத்த சேரன்!!

 திரையரங்கு உரிமையாளர்களுக்கு கோரிக்கை வைத்த சேரன்!!

சேரன் நடிப்பில் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “தமிழ்க் குடிமகன்”.

படம் இன்று முதல் திரைக்கு வர இருக்கும் நிலையில், நடிகர் சேரன் திரையரங்கு உரிமையாளர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

அதில் , “நல்ல திரைப்படம் என பார்த்த நண்பர்கள் பாராட்டுகிறார்கள்.. பத்திரிக்கைகளில் 3.5/5, 3/5 என படத்தின் ரேட்டிங் கொடுக்கிறார்கள்.. நீண்ட நாட்களுக்கு பின் அனைவரும் கதை ரீதியாக பாராட்டும் படமாக இருக்கிறது. ஆனால் இந்த திரைப்படம் வெளியிட திரையரங்குகளும் காட்சிகளும் குறைவாகவே கிடைக்கிறது..

பிறகு எப்படி சிறந்த படங்கள் மக்களுக்கு சென்றடையும்.. எனவே திரையரங்க உரிமையாளர்கள் சிறந்த நல்ல வரவேற்பு இருக்கும் திரைப்படங்களுக்கும் காட்சிகள் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். சிறிய தயாரிப்பாளர்களும் நல்ல திரைப்படங்களும் மக்களிடம் செல்ல வழி செய்யுங்கள்.” என்று கூறியுள்ளார்.

Related post