இயக்கத்தில் மூன்றாவது படம்; தொடங்கிய தனுஷ்!

 இயக்கத்தில் மூன்றாவது படம்; தொடங்கிய தனுஷ்!

தனுஷ் தற்போது தனது 50வது படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படம், அவரது இயக்கத்தில் உருவான இரண்டாவது படமாகும். இதற்கு முன் பவர் பாண்டி என்ற படத்தை இயக்கியிருந்தார் தனுஷ்.

தனுஷின் 50வது படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

50வது படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்ட தனுஷ், அடுத்தகட்டமாக உடனே தனது மூன்றாவது படத்தினை இயக்கும் வேலையிலும் இறங்கியிருக்கிறார்.

இப்படத்தில் தனது சகோதரியின் மகனான சரவண்குமாரை ஹீரோவாக களமிறக்கவிருக்கிறார். ஹீரோயினாக அனிகா சுரேந்திரன் நடிக்கவிருக்கிறார். மேலும், சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், தனுஷும் இப்படத்தில் கேமியோ ரோலில் தோன்றவிருக்கிறாராம்.

Related post