இந்தியில் ரீமேக் ஆகும் பரியேறும் பெருமாள்!

 இந்தியில் ரீமேக் ஆகும் பரியேறும் பெருமாள்!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி நடிப்பில் உருவாகி தமிழ் சினிமாவை பதம் பார்த்த படம் தான் “பரியேறும் பெருமாள்”. இப்படத்தின் மூலமாகவே மாரி செல்வராஜ் இயக்குனராக அறிமுகமானார்.

கிராம வாசனை சற்றும் விலகாது, ஒரு அடித்தட்டு மனிதனின் வாழ்வியல் போராட்டத்தை மிகவும் யதார்த்தமாக காட்சிப்படுத்தியிருந்தார் இயக்குனர். இப்படத்தின் மூலம் பல விருதுகளையும் பெற்றார் இயக்குனர். நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் பா ரஞ்சித் இந்த படத்தை தயாரித்திருந்தார்.

இந்நிலையில் இப்படம் இந்தியில் ரீமேக்காக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல நிறுவனம் ஒன்று இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கியுள்ள நிலையில் முதற்கட்ட பணிகளை தொடங்கியுள்ளது. விரைவில் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளது.

Related post