யோகிபாபு மீது போலீஸில் புகார்…பரபரப்பு!

 யோகிபாபு மீது போலீஸில் புகார்…பரபரப்பு!

காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. இவர் மீது தயாரிப்பாளர்கள் பலர் தொடர்ந்து புகார் அளித்து வருவது வாடிக்கையாகி வருகிறது.

அந்த வரிசையில், வளசரவாக்கம் பழனியப்பா நகரை சேர்ந்தவர்ஹாஷீர் (48). விருகம்பாக்கம் சின்மயா நகரில் திரைப்பட நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்…

வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:

நான் தயாரிக்கும் ‘ஜாக் டேனியல்’ என்ற படத்தில் நடிப்பதற்காக நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிடம் பேசினேன். படத்தில் நடிக்கசம்பளமாக ரூ.65 லட்சம் பேசி, முன் பணமாக ரூ.20 லட்சம் யோகிபாபு பெற்றுக்கொண்டார்.

பின்னர் படப்பிடிப்பு தொடங்கியதும் யோகிபாபுவை அழைத்தபோது, அவர் வரவில்லை.

படப்பிடிப்புக்கு வராமலும், பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் காலம் தாழ்த்தி வருகிறார்.

அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார். புகாரை விசாரிப்பதாக போலீஸார் கூறியுள்ளனர்.

Related post