வெங்கட் பிரபுவின் ”நண்பன் ஒருவன் வந்த பிறகு”!

 வெங்கட் பிரபுவின் ”நண்பன் ஒருவன் வந்த பிறகு”!

தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவிருக்கிறார். இந்நிலையில், தனது சமூக வலைதளத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு அப்டேட் ஒன்னு இருக்கு என்று கூறியிருந்தார்.

இதனால், தளபதி படத்தின் அப்டேட்டாக தான் இருக்கும் என்று நம்பியிருந்தனர் விஜய் ரசிகர்கள்.

ஆனால், வந்ததோ வெங்கட் பிரபுவின் தயாரிப்பு நிறுவனமான ப்ளாக் டிக்கெட் கம்பெனி “நண்பன் ஒருவன் வந்த பிறகு” என்ற படத்தினை கைப்பற்றியிருந்ததற்கான அப்டேட்.

இப்படத்தினை ஹிப் ஹாப் தமிழா ஆதியின் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஆனந்த் என்பவர் இயக்கியிருக்கிறார்.

இவர், மீசைய முறுக்கு படத்தில் ஆதியின் தம்பியாக நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் இப்படத்தினை ரிலீஸ் செய்ய வெங்கட் பிரபு திட்டமிட்டிருக்கிறார்.

 

Related post