உலக அரங்கில் விடுதலை படத்திற்கு கிடைத்த மரியாதை

 உலக அரங்கில் விடுதலை படத்திற்கு கிடைத்த மரியாதை

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன் நடிக்க உருவாகி வெளிவந்த திரைப்படம் விடுதலை பாகம் 1.

இப்படம், அனைவராலும் பெரிதாக பாராட்டப்பட்டு வசூல் ரீதியாகவும் பல சாதனைகளை புரிந்தது.

முதல் பாகம் எடுக்கும் போதே இரண்டாவது பாகத்தின் 70 சதவீத படப்பிடிப்பை முடித்திருந்தார் இயக்குனர் வெற்றிமாறன். இந்நிலையில், படத்தின் அனைத்து பணிகளையும் முடித்து நெதர்லாந்தில் நடைபெறும் 53வது சர்வதேச ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு கோலிவுட்டிலிருந்து விடுதலை படத்தின் இரண்டு பாகங்களும் திரையிடப்பட்டது.

இப்படம் மட்டுமல்லாது ராமின் ஏழு கடல் ஏழு மலை படமும் திரையிடப்பட்டது.

விடுதலை படத்தின் இரண்டு பாகங்களையும் கண்டு ரசித்தவர்கள் எழுந்து நின்று தொடர்ந்து கைகளை தட்டிக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.

இந்த காணொளி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related post