நிர்வாகிக்கு நன்றி கூறி கடிதம் எழுதிய விஜய்!
தளபதி விஜய் தற்போது லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வந்த அவரது பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்திலிருந்து பாடல் ஒன்று வெளியிடப்பட்டது.
பாடல் ஹிட்டும் அடித்ததும் அதேசமயத்தில் சர்ச்சையையும் கிளப்பியது. இது ஒருபுறம் இருக்கட்டும்.
நடிகர் விஜய் தனது மன்ற நிர்வாகியான ஈ சி ஆர் சரவணனுக்கு கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், “ கடந்த ஜூன் 22 அன்று எனது பிறந்தநாளில் நமது மக்கள் இயக்கம் வழியாக நீங்கள் செய்த பல்வேறு நலத்திட்ட உதவிகளை நான் ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் அறிந்தேன். உங்களது இந்த சிறப்பான செயல்பாடுகளை நினைத்து தான் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி” என்று நடிகர் விஜய் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அந்த கடிதம் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.