விஜய் சேதுபதியின் 51வது படத்தின் தலைப்பு இதுதான்!?

 விஜய் சேதுபதியின் 51வது படத்தின் தலைப்பு இதுதான்!?

விஜய் சேதுபதியை வைத்து ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தினை இயக்கியவர் தான் இயக்குனர் ஆறுமுக குமார்.

இவர் அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இப்படம் விஜய் சேதுபதிக்கு 51வது படமாகும்.

படத்தின் படப்பிடிப்பு முழுவதும் மலேசியாவில் நடைபெற்றது. படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டு தேதியை படக்குழு வெளியிடவுள்ளது.

படத்திற்கு சத்தியமா பொய் என்று டைட்டில் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் ருக்மணி, யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

Related post