ஷூட்டிங் ஸ்பார்ட்டில் தற்கொலை செய்து கொண்ட இளம் நடிகை!
20 வயதான நடிகை துனிஷியா சர்மா, ஷூட்டிங் ஸ்பார்ட்டில் சனிக்கிழமை (டிச.24) தற்கொலை செய்துகொண்டார்.
இந்த வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக குற்றச்சாட்டின் பேரில் சக நடிகரான ஷீசன் கான் ஞாயிற்றுக்கிழமை (டிச.25) போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
நடிகை துனிஷியா சர்மாவின் தாயாரான வனிதா அளித்த புகாரில், ‘தனது மகளும் ஷீசன் கானும் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர். இந்த நிலையில் கடந்த 15 நாள்களும் முன்பு இருவரும் பிரிந்துவிட்டனர். என் மகள் மனம் உடைந்து காணப்பட்டார்’ எனத் தெரிவித்துள்ளார்.
இதன் பேரில் போலீசார் தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடிகர் ஷீசன் கான் மீது வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.
28 வயதான ஷீசன் கான், மேலும் சிலரிடமும் நட்பில் இருந்தது தெரியவந்துள்ளது. இவர் ஏற்கனவே ஒரு நடிகையை காதலித்து வந்துள்ளார்.