மலேசிய பிரதமரை சந்தித்த ரஜினிகாந்த்!
ஜெயிலர் படத்திற்குப் பிறகு ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த்.
படப்பிடிப்பிடிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் துவங்கப்பட இருக்கும் நிலையில், புன்னிய ஸ்தலங்களுக்கு பயணப்பட்டார் ரஜினிகாந்த்.
தற்போது மலேசியாவில் இருக்கும் ரஜினிகாந்த் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராகிமை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அப்போது ரஜினிகாந்தை வரவேற்ற அன்வர், சிவாஜி படத்தில் ரஜினி வருவதை போல் நடித்து காட்டி அவரை வரவேற்றார்.
இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்ட அன்வர் இப்ராகிம், “ஆசிய மற்றும் சர்வதேச கலை உலகில் பிரபலமான ரஜினியை இன்று சந்தித்தேன். ரஜினிகாந்த் களத்திலும், திரையுலகிலும் வெற்றிபெற பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.