ஒரே விதமான உணவுதான் வழங்கப்படும் – அருண் விஜய் எடுத்த அதிரடி

 ஒரே விதமான உணவுதான் வழங்கப்படும் – அருண் விஜய் எடுத்த அதிரடி

நடிகரும் அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்த் சில தினங்களுக்கு முன் காலமானார்.

நடிகர்கள் பலரும் அவரது நினைவிடத்திற்கு வந்து தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் அருண் விஜய் நேற்று விஜயகாந்தின் நினைவிடத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அருண் விஜய், ’ ஒரு சிறந்த மனிதரை இழந்துவிட்டோம். கேப்டனைப் போல புதுவிதமா எப்படி சண்டை செய்வது என்று தான் தமிழ் சினிமாவிற்குள் நான் வந்தேன்.

இனி என் படப்பிடிப்பு தளத்தில் ஒரே விதமான உணவு தான் அனைவருக்கும் வழங்கப்படும் என்பதை கூறிக் கொள்கிறேன். நடிகர் சங்க கட்டிடத்திற்கு கேப்டன் விஜயகாந்தின் பெயரை வைக்க வேண்டும் என்பது தான் எனது ஆசையும்.’ என்று கூறினார்.

Related post