வணங்கானுக்காக கைகோர்த்த பாலா – வைரமுத்து!

 வணங்கானுக்காக கைகோர்த்த பாலா – வைரமுத்து!

இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க உருவாகி வருகிறது வணங்கான். படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு பாடல் எழுதுவதற்காக கவிப்பேரரசு வைரமுத்து தற்போது இணைந்துள்ளார்.

Mee Too புகாரில் சிக்கிய வைரமுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை துவங்கியிருக்கிறார் வைரமுத்து.

இதுகுறித்து வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், “

பாலா!
தேடி வந்தாய்;
திகைக்குமொரு
கதைசொன்னாய்;
இதிலும் வெல்வாய்

உடம்பில் தினவும்
உள்ளத்தில் கனவும்
உள்ளவனைக்
கைவிடாது கலை

ஐந்து பாட்டிலும்
ஐந்தமிழுக்கு வழிவைத்தாய்

தீராத கங்குகளால்
பழுத்துக்கிடக்கிறது
என் பட்டறை

தோற்காத ஆயுதங்கள்
வடித்துக் கொடுப்பேன்
போய் வா! ”

என்று கவிதை நயத்தோடு கூறியிருக்கிறார்.

 

Related post