ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பை துவக்கும் மாரி செல்வராஜ்!

 ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பை துவக்கும் மாரி செல்வராஜ்!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரும் வெற்றிபெற்ற படம் தான் “மாமன்னன்”. இப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இப்படத்தினை வெற்றிகரமாக முடித்த மாரி செல்வராஜ், அடுத்ததாக துருவ் விக்ரமை வைத்து ஒரு படத்தினை இயக்க தயாராகி வருகிறார்.

ஆகஸ்ட் மாத இறுதியில் இதன் படப்பிடிப்பு துவங்கும் என தெரிகிறது. முழுக்க முழுக்க தூத்துக்குடி மாவட்டத்தில் இதன் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

தென் தமிழகத்தில் கபாடி விளையாட்டில் மிகப்பெரும் ஜாம்பவனாக திகழ்ந்த மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாறை படமாக இயக்கவிருக்கிறார் மாரி செல்வராஜ்.

மணத்தி கணேசனாக துருவ் விக்ரம் நடிக்கவிருக்கிறார். இதற்காக, திருநெல்வேலியில் தங்கியிருந்து கபாடி பயிற்சி பெற்று வருகிறார் துருவ் விக்ரம்.

90 களின் காலக்கட்டத்தில் படத்தினை நகர்த்த இயக்குனர் திட்டமிட்டிருக்கிறார்.

 

Related post