லோகேஷ் இயக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்கள்; சூர்யா கொடுத்த அப்டேட்!

 லோகேஷ் இயக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்கள்; சூர்யா கொடுத்த அப்டேட்!

சில தினங்களுக்கு முன்பு ரசிகர்களை சந்தித்து பேசிய நடிகர் சூர்யா, தனது அடுத்த படங்களின் அப்டேட்டை ரசிகர்களிடையே பகிர்ந்து கொண்டார்.

தற்போது நடித்து வரும் கங்குவா படத்தின் படப்பிடிப்பை முடித்ததும், சுதா கங்கோரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாகவும், அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடி வாசல் படத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறினார்.

ரோலக்ஸ் கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாகவும் சூர்யா கூறினார்.

அதுமட்டுமல்லாமல், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரும்புக்கை மாயாவி படத்தின் கதையையும் கேட்டிருப்பதாகவும் கூறினார் சூர்யா..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்களை நடிக்க திட்டமிட்டிருப்பதாகவும் நடிகர் சூர்யா ரசிகர்கள் மத்தியில் கூறினார்.

 

Related post