இரவின் நிழல்; அதிகாலையில் அமோக வரவேற்பு; பார்த்திபன் மகிழ்ச்சி!

இரா பார்த்திபன் எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படமான “இரவின் நிழல்” இன்று உலகமெங்கும் வெளியாகியிருக்கிறது.
நான்-லீனியர் படமாக உருவாகியிருக்கும் இப்படம் பல விருதுகளை குவித்த வண்ணம் இருக்கிறது. பத்திரிகையாளர்களும் பிரபலங்களும் இப்படத்தை பெரிதாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை படம் வெளியானது. படத்தினை பார்த்த மக்கள் கண்டிப்பாக இப்படத்தை கொண்டாட வேண்டும். தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் பார்த்திபன் என்று கூறினர்.
மக்களிடையே இப்படம் சென்றடைந்ததை எண்ணி பார்த்திபன் உற்சாகத்தில் இருக்கிறாராம்.