மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகும் படத்தின் கதை இது தான்;

 மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகும் படத்தின் கதை இது தான்;

பரியேறும் பெருமாள் என்ற முதல் படத்திலேயே பல ரசிகர்களை சம்பாதித்த இயக்குனர் தான் மாரி செல்வராஜ். தற்போது, உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கி ஜூன் மாதம் வேகியாகவுள்ள படம் “மாமன்னன்”.

மாமன்னன் படத்தின் வெளியீட்டிற்கு பின் துருவ் விக்ரமுடன் கூட்டணி போடுகிறார் மாரி செல்வராஜ்.

துருவ் விக்ரமுடன் அவர் இணையும் படத்தை பற்றி அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,

“எனக்கு நீண்டநாளாக வாழ்க்கை வலராறு படங்களை எடுக்க வேண்டும் என்பது ஆசை. மனத்தி கணேசன் என்ற கபடி வீரரின் வாழ்க்கையை தான் படமாக்குகிறேன். அந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்குகிறது என்றும், கபடி வீரராக நடிக்க துருவ் விக்ரம் பயிற்சி எடுத்து வருகிறார் என்றும் தெரிவித்த அவர். இந்த படம் உருவாவது பா.இரஞ்சித் மற்றும் விக்ரம் சாருக்கு மிக்க மகிழ்ச்சி என்றார்”.

இதனை அறிந்த துருவ் மற்றும் மாரி செல்வராஜின் ரசிகர்கள் அப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Related post