பழனி முருகன் அருளோடு ரீ எண்ட்ரி கொடுக்கும் மீனா!

 பழனி முருகன் அருளோடு ரீ எண்ட்ரி கொடுக்கும் மீனா!

குழந்தை பருவத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகை மீனா. திருமணத்திற்குப் பிறகு கேரக்டர் ரோல்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் மீனா..

சமீபத்தில் ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தவர், அதன் பிறகு தனது கணவர் மறைவிற்குப் பிறகு சினிமாவை தள்ளி வைத்திருந்தார் நடிகை மீனா.

இந்நிலையில், மீண்டும் கதைகளை கேட்க ஆரம்பித்திருக்கிறார். இயக்குனர் ஒருவர் பழனி முருகனை மையமாகக் கொண்டு ஆன்மீகக் கதை ஒன்றை கூறியிருக்கிறார், அந்த கதை மீனாவிற்கு மிகவும் பிடித்துப் போக உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.

பழனி முருகன் அருளோடு மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்கத் தயாராகிவிட்டார் நடிகை மீனா.

 

Related post