பிரபல சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் கைது!

 பிரபல சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் கைது!

பாலாஜி என்பவர் சென்னை போலீஸ் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், லிப்ரா பட தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த ரவி என்பவர், திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றுதல் திட்டம் ஒன்று வருவதாகவும், அதில்முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபத்தை எடுக்கலாம் எனவும் கூறினார்.

அதில் என்னை 16 கோடி ரூபாய் முதலீடு செய்ய வைத்தார். ஆனால், இதுவரை எந்த திட்டமும் ஆரம்பிக்கப்படவில்லை. எனது பணத்தையும் திருப்பி தரவில்லை. அதனால், ரவீந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் போலி ஆவணங்களை காண்பித்து 16 கோடி ரூபாய் மோசடி செய்தது உறுதியானது.

இவ்வழக்கில், அசோக்நகரில் உள்ள வீட்டில், ரவீந்தரை கைது செய்தனர். அவரது வீடு மற்றும் அலுவலகத்திலிருந்து, வழக்கு சம்பந்தமான ஆவணங்கள், இரண்டு மடிக்கணிணி, மூன்று கணிணி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ரவீந்தர் மீது ஏற்கனவே, 8 கோடி ரூபாய் மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related post