அனைவரையும் திருப்திப்படுத்தக்கூடிய படைப்பு என்ற ஒன்று இல்லை – மைக்கேல் குறித்து இயக்குனர்

 அனைவரையும் திருப்திப்படுத்தக்கூடிய படைப்பு என்ற ஒன்று இல்லை – மைக்கேல் குறித்து இயக்குனர்

இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் மைக்கேல். இப்படத்தில் சந்திப் கிஷன் , விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இப்படம் சற்று கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதுகுறித்து இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “எனது எல்லா படைப்புகளையும் போலவே மைக்கேல் திரைப்படமும் என் இதயத்துக்கு நெருக்கமான ஒன்று தான். அதற்கும் என் 100% உழைப்பையே கொடுத்து இருக்கிறேன். அனைவரையும் திருப்திப்படுத்தக்கூடிய படைப்பு என்ற ஒன்று இல்லை. அனைவரையும் திருப்திப்படுத்தக்கூடிய விருப்பத் தேர்வும் மாறுபடவே செய்யும்.

மைக்கேலை ரசித்தவர்களுக்கு நன்றி. மாறுபட்ட கருத்து கொண்ட ரசிகர்களுக்கு அடுத்த முறை உங்களையும் கவரும் ஒரு சினிமாவுக்காக உழைக்கத் தயாராக இருக்கிறேன். உங்கள் அனைத்து கருத்துகளையும் மதிக்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

 

Related post