ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்!?
பிரின்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.. இந்நிலையில் பிரின்ஸ் திரைப்படம் மிகப்பெரும் தோல்வியை சந்தித்த நிலையில் கட்டாயமாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
அவர் நடிப்பில் உருவான அயலான் திரைப்படமும் இன்னமும் ரெடியாகாத காரணத்தினால் மாவீரன் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார். மேலும் தனது அடுத்த படத்திற்கான இயக்குனரையும் தேர்வு செய்து வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயனிடம் ஒரு கதையை கூற அதுவும் சிவகார்த்திகேயனுக்கு பிடித்துப் போக உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.
ஆகவே விரைவில் இருவரும் இணையும் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.