விரைவில் அனைவரிடமும் பேசுவேன் – விஜய் ஆண்டனி

 விரைவில் அனைவரிடமும் பேசுவேன் – விஜய் ஆண்டனி

நடிகரும் இயக்குனருமான விஜய் ஆண்டனி, தற்போது “பிச்சைக்காரன் 2” படத்தினை இயக்கியும் நடித்தும் வருகிறார்.

சில தினங்களுக்கு முன், இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றது. அப்போது, மிகப்பெரும் விபத்து ஏற்பட்டு நடிகர் விஜய் ஆண்டனி ஆபத்தான முறையில் மலேசியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது உடல்நிலை குறித்து தெரிவித்துள்ளார்.

அதில், “ மலேசியாவில் படப்பிடிப்பின்போது தாடை மற்றும் மூக்கில் ஏற்பட்ட காயத்தில் இருந்து நான் குணமடைந்து வருகிறேன். நான் ஒரு பெரிய அறுவை சிகிச்சையை முடித்திருக்கிறேன். வெகு விரைவில் அனைவரிடமும் பேசுவேன். உங்கள் அனைவரின் ஆதரவு மற்றும் என் உடல்நிலை குறித்த அக்கறைக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.

 

Related post