அரண்மனை 4’ஐ தொடர்ந்து கலகலப்பு படத்தை கையில் எடுத்த சுந்தர் சி!
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, யோகிபாபு, கோவை சரளா, ராஷ்மிகா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் அரண்மனை 4.
குடும்பம் குடும்பமாக இப்படத்தைக் காண ரசிகர்கள் திரண்டு வந்து கொண்டிருக்கின்றனர். கடந்த சில மாதங்களில் வெளிவந்த திரைப்படங்களில் அரண்மனை 4 திரைப்படமே மிகப்பெரும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இப்படத்தினை முடித்த கையோடு கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கவிருக்கிறாராம் சுந்தர் சி.
அதற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், விரைவில் அதற்கான அறிவிப்பு வெளிவரும் எனவும் சுந்தர் சி கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், முதல் பாகத்தில் நடித்திருந்த விமல் மற்றும் சிவா மூன்றாம் பாகத்தில் இருப்பார்கள் என்றும் கூறியிருக்கிறார் சுந்தர் சி.