மோதிக் கொள்ளும் சுந்தர் சி மற்றும் விஷால்!?

 மோதிக் கொள்ளும் சுந்தர் சி மற்றும் விஷால்!?

அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை தற்போது முடித்து வைத்திருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி.

இப்படத்தில், தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு மற்றும் சந்தானம் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

படம் முடிந்து பல மாதங்கள் ஆன நிலையில், ரிலீஸ் தேதி தொடர்ந்து மாறிக் கொண்டே இருந்தது.

இந்நிலையில், படம் வரும் ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதே தேதியில் ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்க உருவாகியுள்ள ரத்னம் படமும் திரைக்கு வர இருக்கிறது.

ஒரே நேரத்தில் கமர்ஷியல் இயக்குனர்களான ஹரி மற்றும் சுந்தர் சி நேருக்கு நேராக மோதிக் கொள்ளவிருக்கின்றனர்.

 

Related post