சங்கமித்ரா: இந்த வருட இறுதியில் படப்பிடிப்பை துவங்குகிறார் சுந்தர் சி!
இயக்குனர் சுந்தர் சி’யின் கனவு திரைப்படமான சங்கமித்ரா திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படாமலே உள்ளது.
ஒருவழியாக இந்த வருட இறுதியில் படப்பிடிப்பை துவங்க சுந்தர் சி திட்டமிட்டிருக்கிறார்.
சுமார் இரண்டு வருடம் படப்பிடிப்பிற்கே மட்டுமே எடுத்துக் கொள்ளும் என்கிறார்கள். இரண்டு பாகங்களாக எடுக்க சுந்தர் சி திட்டமிட்டிருக்கிறார்.
ஜெயம் ரவி இந்த படத்தில் இருந்து விலகியதால், அவருக்கு பதிலாக விஷால் நடிக்கவிருக்கிறார். ஆர்யாவும் இப்படத்தில் இருக்கிறார்.
பிரமாண்டமான பொருட்செலவில் உருவாக இருக்கிறது சங்கமித்ரா.
விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்.