சிம்பு, தனுஷ் உள்ளிட்ட நால்வருக்கு ரெட்-கார்ட்!
நடிகர் தனுஷ், தேனாண்டாள் முரளி தயாரிக்கும் படத்தில் நடித்து வந்தார். பின், 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வேறு படத்தில் கவனத்தை செலுத்தியதால், தனக்கு நஷ்டம் ஏற்பட்டு வருவதாக தயாரிப்பாளர் புகார் அளித்திருந்தார்.
நடிகர் அதர்வா தயாரிப்பாளர் மதியழகன் அளித்த புகாரிலும், நடிகர் சிம்புவிற்கு தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் தனுஷ், சிம்பு, அதர்வா உள்ளிட்ட மூவருக்கும் ரெட் கார்ட் வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், நடிகர் விஷால் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தபோது சங்க பணத்தை முறையாக வரவு, செலவு கணக்கு வைக்காமல் இருந்ததாக அவர் மீது எழுந்த குற்றச்சாட்டுக்காக அவருக்கும் ரெட்-கார்ட் வழங்கப்பட்டுள்ளது.