வெங்கட் பிரபு படத்தை முடித்ததும் ரெஸ்ட் தான் .. விஜய் எடுத்த முடிவு!

 வெங்கட் பிரபு படத்தை முடித்ததும் ரெஸ்ட் தான் .. விஜய் எடுத்த முடிவு!

‘லியோ’ படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபுவோடு கைகோர்க்கும் விஜய், அடுத்த ஒரு வருடத்துக்கு வேறு கதைகளைக் கேட்கிற முடிவில் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பார்லிமெண்ட் தேர்தல் நேரத்தில் ‘ஒரு வருடம் படம் வேண்டாம்’ என்கிற முடிவுக்கு வந்திருக்கிறாராம் விஜய்.

தொடர்ந்து படங்கள் செய்துகொண்டிருப்பதால் உண்டான சலிப்பா இல்லை அரசியல் ஈடுபாடா எனப் பலரும் இது குறித்து விவாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

‘சில மாசங்களுக்கு ஷூட்டிங் பரபரப்பு இல்லாமல் ஓய்வாக இருக்க விரும்புகிறேன்’ என நெருங்கியவர்களிடம் விளக்கம் சொல்லியிருக்கிறாராம் விஜய்.

 

Related post