ரோஹினி விவகாரம்; நச் என்று பதில் கூறிய விஜய் சேதுபதி!
சென்னையில் நேற்று பிரபல திரையரங்கான ரோஹினி திரையரங்கில் சிம்பு நடித்த பத்து தல திரைப்படத்தைக் காண நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவரை திரையரங்கிற்குள் அனுமதி மறுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதற்கு பல நட்சத்திரங்களும் தங்களது எதிர்ப்பைத் தொடர்ந்து கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதியும் தனது பாணியில் தனது கருத்தை அவர் பதிவு செய்திருக்கிரார்.
நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்தபோது இது தொடர்பான கேள்வி அவரிடம் வைக்கப்பட்டது. அப்போது அவர் பேசியதாவது, “ யாரும் யாரையும் ஒடுக்கப்படுவதை எப்போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. மனுஷ பயலுங்க ஒன்னா வாழத்தான் இந்த பூமி படைக்கப்பட்டிருக்கு.” என்று தனக்கே உரித்தான பாணியில் கூறியிருக்கிறார்.