மீண்டும் தள்ளிப்போகும் சிம்புவின் பத்து தல

 மீண்டும் தள்ளிப்போகும் சிம்புவின் பத்து தல

சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனரான கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் என நட்சத்திரங்கள் பலர் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “பத்து தல”.

இப்படத்தின் படப்பிடிப்பு சில வருடங்களுக்கு முன்பே ஆரம்பமாகி இருந்தாலும், தொடர்ந்து பல இன்னல்களை சந்தித்து ஒரு வழியாக இப்படத்தின் படப்பிடிப்பினை முடித்திருக்கிறது படக்குழு.

படம் இம்மாதம் வெளிவரும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பணிகள் இன்னும் முடிவடையாததால் பிப்ரவரி மாதம் வெளிவரும் என அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், பிப்ரவரி மாதம் தனுஷி வாத்தி உள்ளிட்ட சில படங்கள் வெளிவருவதால், மீண்டும் பத்து தல தள்ளிப்போகவிருக்கிறதாம். மார்ச் மாதம் படத்தினை வெளியிட்டு விடலாம் என படக்குழு திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்திற்கு முன்னதாகவே பத்து தல திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிம்பு. இப்படத்தை சில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணா இயக்க சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், டிஜே மனுஷ்யபுத்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள். இத்திரைப்படம் டிசம்பர் 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் இறுதி கட்ட பணிகள் முடிவடையாத்தால் பிப்ரவரிக்கு ரிலீஸ் மாற்றப்பட்டது. இந்த நிலையில் பிப்ரவரி மாதத்தில் தனுஷின் வாத்தி உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாவதால் அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்கு படதை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளார்கள்.

Related post